எச் ராஜாவுக்கு வயிற்றெரிச்சல் இன்னும் தீரல போல... ஜோதிமணி அட்டாக்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்னும் கலவரத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வயிற்றெரிச்சல் தீரவில்லை போல் என்று காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி விமர்சனம் செய்தார்.
எச் ராஜா வேடசந்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் புரட்சியே அல்ல.

அங்கு மது, மாது, பீஃப் ஆகியன ஆறாக ஓடியது என்று போராட்டத்தை கொச்சைப்படுத்தி மீண்டும் சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பேசினார்.
மெரினாபோராட்டம் தமிழக இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம்.மிகுந்த கட்டுபாட்டோடும்,கண்ணியத்தோடும்,பொறுப்போடும் அமைதிவழியில் நடத்தப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்கவைத்த போராட்டம். ராஜா எவ்வளவோ முயன்றும் கலவரம் செய்ய முடியவில்லை.அந்த வயிற்றெறிச்சல் இன்னும் தீரவில்லைபோல😃 https://t.co/Eo42WtumO3
— Jothimani (@jothims) September 18, 2018
ஏற்கெனவே போலீஸார், நீதிமன்றம் ஆகியவை குறித்து அவதூறாக பேசிய நிலையில் அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மெரினா போராட்டம் தமிழக இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம்.
மிகுந்த கட்டுபாட்டோடும்,கண்ணியத்தோடும்,பொறுப்போடும் அமைதி வழியில் நடத்தப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம். ராஜா எவ்வளவோ முயன்றும் கலவரம் செய்ய முடியவில்லை.அந்த வயிற்றெரிச்சல் இன்னும் தீரவில்லைபோல என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications