அப்பா, அம்மாவை எனக்கே ஓட்டுப் போடச் சொல்லு கண்ணு.. கலக்கும் ஜோதிமணி!
கரூர்: கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தன் கையே தனக்கு உதவி என்பது போல யாரையும் நம்பாமல் தன்னம்பிக்கையுடன் கரூர் தொகுதியைக் கலக்கி வருகிறார்.
வித்தியாசமாகவும், விதம் விதமாகவும் ஓட்டு வேட்டையாடி வருகிறார் ஜோதிமணி.
கையில் காசு பற்றாக்குறை என்று அவர் குறை கூறினாலும் கூட கால் தேய நடந்து நடந்து கூப்பிய கைகளுடன் யாரையும் விடாமல் சந்தித்து வேட்டையாடி வருகிறார்.
க.பரமத்தியில் வித்தியாச பிரசாரம்
ஜோதிமணி க.பரமத்தி பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது வித்தியாசமான முறையில் அவர் ஓட்டு வேட்டையாடினார்.
ஓட்டுப் போடச் சொல்லு கண்ணு...
அங்கிருந்த சிறு குழந்தைகளிடம் உங்கள் அப்பா, அம்மா க்களை எனக்கு ஒட்டு போட சொல்லுங்க கண்ணு என்றார்.
என்ன படிக்கிறப்பா...
பின்னர் வாக்குகள் சேகரித்த ஜோதிமணி சிறுவனிடம் என்ன படிக்கிறப்பா ? என்றார்.
நான் 5 வது அக்கா என்றான்.
அன்னை சோனியா கொண்டு வந்த திட்டம்தான்
அதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் கொண்டு வந்தது மத்தியில் உள்ள அன்னை சோனியா காந்தி அரசு தான் என்றார்.
நல்லா படிக்க காங்கிரஸுக்கு ஓட்டு போடுங்க...
அதனால் குழந்தைகள் அனைவரும் நல்லா படித்திட காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போட சொல்லுங்க என்றார் ஜோதிமணி.