எச் ராஜா கைது இருக்கட்டும்.. ரஃபேல் ஊழல், பெட்ரோல்-டீசல் விலை உயர்வும் முக்கியம்- ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச் ராஜா கைதும் முக்கியம்தான், ஆனால் ரஃபேல் ஊழல் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அதை விட முக்கியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஹைகோர்ட்டையும் போலீஸாரையும் தவறாக பேசிய எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

Jothimani says dont forget Rafale deal scam

இந்நிலையில் முதல்வரையும் காவல்துறையையும் விமர்சனம் செய்த கருணாஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். தற்போது எச் ராஜாவை கைது செய்யப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழக காவல்துறையின் 7 தனிப்படைகள் தமிழகத்தை கலவர பூமியாக்கத் துடிக்கும் எச்.ராஜாவை கைதுசெய்யட்டும்! நாம் மீண்டும் மோடியின் 1,30,000 கோடி ரபேல் ஊழல் மற்றும் நம்மை வதைக்கும் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை உயர்வுக்குத் திரும்புவோம் என்று கூறியுள்ளார்.

அதாவது எச் ராஜா கைது செய்யப்படுவது முக்கியமான விஷயம் என்றால் அதை விட முக்கியமான விஷயம் ரபேல் விமான பேரம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று மீண்டும் நினைவூட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+