மோடியும், பாஜகவுமே முதல் தேச விரோதிகள்.. நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி பதிலடி
சென்னை: பிரதமரை எதிர்த்துப் பேசுபவர்கள் தேச விரோத சக்திகள் என்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசிய கொடி எரிக்கப்பட்டது, பிரதமருக்கு எதிராக கோஷமிடப்பட்டது என்றும் இது தேச விரோத சக்திகள் செயல் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜோதிமணி பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது: அப்படிப்பார்த்தால் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்துப் பேசிய மோடியும்,பிஜேபியுமே முதல் தேசவிரோத சக்திகள்.
மன்மோகன் சிங்குக்கும் ,காங்கிரஸ் கட்சிக்கும் சகிப்புத்தன்மையும்,ஜனநாயக பண்புகளும் இருந்தன. மோடிக்கும்,பிஜேபிக்கும் சர்வாதிகாரமும், அராஜகமும்,அடக்குமுறையுமே சொந்தம். இதுதான் வேறுபாடு!
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பேஸ்புக் பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.