கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் எங்கே? - வீடியோ
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணனை கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் எங்கு உள்ளார் என தெரியவில்லை.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகிக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சிஎ.எஸ் கர்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது அப்போதையை தலைமை நீதிபதி கவுல் மீதும் மற்ற நீதிபதிகள் மீதும் ஊழல்குற்றச்சாட்டுகளைக் கூறினார்.

இதனால் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. ஆனால் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறை தண்டனை உத்தரவிட்டார். அந்த நீதிபதிகள், நீதிபதி கர்ணனுக்கு மனநிலை சரியில்லை என்று கூறினர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவு செய்ய கொல்கத்தா டிஜிபி-க்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கொல்கத்தா போலீசார் நீதிபதி கர்ணனை கைது செய்ய தேடி வருகின்றனர்.
ஆனால், நேற்று முன்தினமே விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் நீதிபதி கர்ணன். சென்னை வந்த அவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்த நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீஸ் சென்னைக்கு வந்தது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாகக் கூரப்படுகிறது. தமிழக போலீசாரின் உதவியுடன் நீதிபதையை கைது செய்ய கொல்கத்தா போலீஸ் முயன்று வருகிறது.












Click it and Unblock the Notifications