நீதி துறை மீது மக்களின் நம்பிக்கை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு... நீதிபதி வேல்முருகன்
நீதித் துறை மீது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு: நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக செங்கல்பட்டு மகளிர் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் 6 வயது குழந்தையை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுகாரரான தஷ்வந்த் கைது செய்யப்பட்டான். அவன் போலீஸார் புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி வேல்முருகன் என்ன தீர்ப்பு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை என்று அறிவித்தவுடன் ஹாசினியின் தந்தை மகளின் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார். போலீஸார் நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
ஹாசினியின் தந்தையும் இத்தகைய உச்சபட்ச தண்டனை வழங்கியதற்கு நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அவர் மட்டுமல்ல முகம் தெரியாத எவ்வளவோ பேர் டிவியை பார்த்துக் கொண்டு நீதிபதியை பாராட்டிய வண்ணம் இருந்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து நீதிபதி வேல்முருகன் கூறுகையில் மக்களுக்கு நம்பிக்கையை காப்பாற்றவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை காப்பதற்கே அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது.
இல்லாவிட்டால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய்விடும் என்றார் வேல்முருகன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications