நீதி துறை மீது மக்களின் நம்பிக்கை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு... நீதிபதி வேல்முருகன்
நீதித் துறை மீது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு: நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக செங்கல்பட்டு மகளிர் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் 6 வயது குழந்தையை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுகாரரான தஷ்வந்த் கைது செய்யப்பட்டான். அவன் போலீஸார் புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி வேல்முருகன் என்ன தீர்ப்பு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை என்று அறிவித்தவுடன் ஹாசினியின் தந்தை மகளின் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார். போலீஸார் நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
ஹாசினியின் தந்தையும் இத்தகைய உச்சபட்ச தண்டனை வழங்கியதற்கு நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அவர் மட்டுமல்ல முகம் தெரியாத எவ்வளவோ பேர் டிவியை பார்த்துக் கொண்டு நீதிபதியை பாராட்டிய வண்ணம் இருந்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து நீதிபதி வேல்முருகன் கூறுகையில் மக்களுக்கு நம்பிக்கையை காப்பாற்றவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை காப்பதற்கே அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது.
இல்லாவிட்டால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய்விடும் என்றார் வேல்முருகன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications