மெரினாவில் கஞ்சா விற்பனை செய்த ‘கோ-2’ பட நடிகர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: சென்னை மெரினாவில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலுக்குத் தலைவனாக செயல்பட்ட, துணை நடிகர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறப்பதாக போலீசாருக்குப் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மெரினா இன்ஸ்பெக்டர் அரிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது மெரினா சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் பாண்டியன், மாறன், யூசுப், பாசில், தனம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த மூர்த்தி (எ) கஞ்சா கிருஷ்ணமூர்த்தியை (30) தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக சிவராஜபுரத்துக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் வீட்டருகே போலீசார் மாறுவேடத்தில் பதுங்கியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தியை அவர்கள் கைது செய்தனர். மேலும், அவர் ஓட்டி வந்த விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளையும், அவர் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில்,
என்னுடைய தந்தை முருகன் மெரினாவில் கஞ்சா தொழிலில் கொடிகட்டி பறந்தார். அவர் இறந்துவிட்டார். அவருக்கு பிறகு கஞ்சா தொழிலை நானும், எனது சகோதரி வாசுகியும் செய்து வந்தோம்.
தேனி, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை பஸ் மூலம் கோயம்பேடுக்கு எடுத்து வருவோம். பின்னர் அதனை பிரித்து சினிமாவில் பணியாற்றும் துணை நடிகர்கள், தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வோம்.
மெரினா கடற்கரைக்கு வரும் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்வோம்.
தற்போது நான் ‘கோ-2' என்ற தமிழ் படத்தில் துணை நடிகராக நடித்துள்ளேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்து தலைமறைவாக இருந்தேன். குடும்பத்தை பார்க்கும் ஆசையில் வந்தபோது சிக்கிவிட்டேன்' என அவர் தெரிவித்தார்.
கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளி லலிதா என்ற பெண் கஞ்சா வியாபாரியும் நேற்றுமுன்தினம் போலீசாரிடம் சிக்கினார். அவரிடமிருந்து 20 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களும், ரூ.5 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியும், லலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி வாசுகி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications