"காய் காய் காய்".. கலகலக்க வைக்கும் செளராஷ்டிரா "ரீமிக்ஸ்"!
சென்னை: சில விஷயங்கள் நம்மை சிலாகிக்க வைக்கும்.. சில சிந்திக்க வைக்கும்.. சில சிரிக்க வைக்கும்.. சில டென்ஷனாக்கும்.. சில மனசை லேசாக்கும்.. இந்தப் பாடலைக் கேட்டால் என்ன உணர்வு வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஜில்லுன்னு இருந்துச்சுங்க பாட்டைக் கேட்டுப், பார்த்து முடித்தபோது.
செளராஷ்டிர மொழிப் பாடல் இது. ஆனால் எல்லாருக்கும் நன்கு பழக்கமான தமிழ் சினிமாப் பாட்டுதான் இது. அதைத்தான் அப்படியே செளராஷ்டிர மொழியில் ரீமிக்ஸ் செய்து விட்டனர்.

மதுரைப் பக்கம், புதுச்சேரி பக்கம், தஞ்சாவூர் பக்கமிருந்து வந்தவர்களுக்கு செளராஷ்டிரர்கள் குறித்து நல்ல பரிச்சயம் இருக்கும். அந்த ஊர்களின் பிரிக்க முடியாத இனத்தவர் செளராஷ்டிரர்கள்.
குறிப்பாக மதுரையில்தான் செளராஷ்டிர மக்கள் அதிகம்.. அவர்களது பாஷை கேட்க கலகலப்பாக இருக்கும். "காய்ரா பாபு.. அம்பா அவுடரியோ" இந்த வார்த்தையைக் கேட்காமல் எந்த மதுரைக்காரருக்கும் அன்றைய பொழுது விடியாது - முடியாது... அப்படி மதுரை வாழ்வோடு நீக்கமறக் கலந்து விட்டவர்கள் செளராஷ்டிரர்கள்.
அவர்களுக்கென்று எழுத்து வடிவம் இல்லாமல் இருக்கிறது. அதையும் கூட இப்போது கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். அத்தோடு சினிமாப் படங்களையும், குறும்படங்களையும் தங்களது மொழியில் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
நிற்க.. இந்தப் பாடல் ஒரு தமிழ்ப் படப் பாடலின் செளராஷ்டிர மொழி ரீமிக்ஸாகும். பாண்டியநாடு படத்தில் வந்து பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய கலாய்ச்சிபை பாடலைத்தான் மாத்திப் போட்டு அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த கே.ஆர். ஜவஹர். சும்மா சொல்லக் கூடாது... கேட்கவே செம ஜிலுஜிலுப்பாக உள்ளது.. நீங்களும் கேட்டுப் பாருங்களேன்...!












Click it and Unblock the Notifications