சரத்பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும்! தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு!
டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர் சரத்பிரபுவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர் சரத்பிரபுவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவ கல்லூரியில் பயிலும் உயர்கல்வி மாணவர் சரத்பிரபு இறப்பு அதிர்ச்சியளிக்கிறது. சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்களது பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தொடர்ந்து வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும், தாக்கப்படுவதும், கொலை-தற்கொலை செய்யப்படுவதும் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.பல மாதங்களாக ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று கோரிக்கையை அரசு செவி சாய்க்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தும் அதற்குண்டான முயற்சியை உதாசினப்படுத்துவது தமிழக நலனை தொடர்ந்து புறக்கணிப்பதை காட்டுகிறது.மேலும் இதற்குண்டான நடவடிக்கையை துரிதப்படுத்துவதும்,தமிழகத்தில் அனைத்து விதமான ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
தமிழகத்திலிருந்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களை இளைஞர் நலன் அமைச்சகம் மூலம் ஒருங்கிணைத்து அவர்களுக்குண்டான அனைத்து உதவிகளையும் செய்யும் முயற்சியை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.மேலும் இது போன்ற மர்ம மரணங்களை தடுப்பதற்கும்,வளாகங்களில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை குறித்து அரசு சட்டம் இயற்ற வேண்டும். சரத்பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டியும்,அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவியை வழங்கிடவும் அரசைக் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications