தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்பு – கி.வீரமணி வீடு முற்றுகை… பஸ் மீது கல் வீசியவர்கள் கைது
சென்னை: கடுமையான எதிர்ப்பையும் மீறி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுடன் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் தாலி அகற்றும் நிகழ்வுக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஸ் மீது கல்வீச்சு, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் வீடு முற்றுகை என போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தாலி அகற்றும் போராட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இந்த தாலி அகற்றும் போராட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அக்னிஹோத்ரி வீட்டில் 8 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

கல்வீச்சு
இந்நிலையில், இந்த தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பூந்தமல்லியில் நள்ளிரவில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியினர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்தன. இந்த தாக்குதல் சம்வத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கி.வீரமணி வீடு முற்றுகை
திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 10 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications