சென்னையில் இன்று மாலை கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!
சென்னையில் இன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரியார் திடலில் திக தலைவர் கி வீரமணி தலைமையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தொடர்பாக கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் அந்தக்கூட்டம் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து கணிக்க 24 மணிநேரம் கெடு விதித்திருந்தது.
அதனைக் கருத்தில் கொண்ட கி வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications