எச்.ராஜாவை சாரணர் இயக்க தலைவராக்கும் பாஜக கனவு பலிக்காது: கி.வீரமணி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: எச்.ராஜாவை சாரணர் இயக்கத்தலைவர் ஆகிவிடலாம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இன்று தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தஞ்சாவூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரமணி மேலும் கூறியதாவது:

எச்.ராஜாவை சாரணர் இயக்க தலைவர் ஆக்கிவிடலாம் என்று பாஜக கனவு காண்கிறது. ஆனால் அந்த கனவு பலிக்காது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதமாக அரசு செயல்படவில்லை என்றும் மக்கள் கிளர்ச்சி ஏற்படாமல் அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications