காஞ்சிபுரத்தில் கபடி வீரர் இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கபடி வீரரை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன் (28) கபடி விளையாட்டு வீரர். காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பிற மாவட்டங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் ஜெகநாதன் பங்கேற்று விளையாடி வந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி முசரவாக்கம் காலனி சேர்ந்த ராஜபதி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஜெகநாதனோடு சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் ராஜபதிக்கும், ஜெகநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜபதி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெகநாதன் தலையில் தாக்கினார். தொடர்ந்து ராஜபதியின் நண்பர்களும் ஜெகநாதனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து ஜெகநாதன் தொலைபேசியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்படி உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகநாதனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கும், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஜெகநாதன் உயிரிழந்தார்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications