ஈரோடு சுற்றுப் பயணம்... அறிவித்தார் கமல் ஹாஸன்!
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் தனது ஒரு நாள் சுற்றுப் பயண விவரத்தை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாஸன்.
மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல் ஹாஸன், அந்த அமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மக்களைச் சந்திக்க மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் என படு பிஸியாக செயல்பட்டு வருகிறார்.
தனது கட்சி ஆரம்பிக்கும் முன் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப் பயணம் செய்தார். அன்று மாலை கட்சியை அறிவித்தார்.
அடுத்த கட்டமாக இப்போது ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 11) ம் தேதி ஈரோடு வருகிறார் கமல் ஹாஸன்.
அவரது பயண விவரம்:
காலை 8.30 மணிக்கு மொடக்குறிச்சி
9.30 செய்தியாளர் சந்திப்பு (ATRIUM)
9.45 மணி - வீரப்பன் சத்திரம்
10.30 - சித்தோடு
11.00 - கவுண்டம்பட்டி
12.00 - கோபிசெட்டிப் பாளையம்
பகல் 12.45 - மதிய உணவு
பிற்பகல் 2.00 - சத்தியமங்கலம்
பிற்பகல் 3.00 - டிஎன் பாளையம்
பிற்பகல் 3.45 - அதானி
மாலை 4.15 - அந்தியூர்
மாலை 4.30 - பருவாட்சி
மாலை 5.00 - பவானி
மாலை 5.45 - பெரிய அக்ரஹாரம்