கனிமொழி கிராமத்தை மாடலாக வைத்து 10 கிராமங்களை தத்தெடுக்கும் கமல்!
கனிமொழியின் தத்தெடுப்பு கிராமத்தை முன்மாதிரியாக வைத்து 10 கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறாராம் கமல்ஹாசன்
Recommended Video

சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தத்தெடுத்துள்ள கிராமத்தை முன்மாதிரியாக வைத்து தங்களது கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறாராம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியைத் துவக்கி தனது அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கமல். தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக மக்களிடம் நெருங்குவதற்கான செயல்திட்டங்களைத் தயாரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்கள் கமலின் கொள்கை வகுப்பாளர்கள்.
அதில் ஒன்று கிராமங்களைத் தத்தெடுத்தல். இந்த யோசனையை கமலிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதையும் கவர் பண்ணுகிற மாதிரி 4 திசைகளையும் உள்ளடக்கி 10 கிராமங்களை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார் கமல்.

எம்பிக்கள் தத்தெடுக்கும் கிராமங்கள்
தமிழக கிராமங்களிலிருந்து தேசத்தைப் பார்ப்பேன் என சொல்லி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒவ்வொரு கிராமங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்தனர்.

கனிமொழியின் முன்மாதிரி கிராமம்
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேஷபுரத்தை தத்தெடுத்திருந்தார் கனிமொழி. தத்தெடுத்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்க பல்வேறு பணிகளை செய்து முடித்து வருகிறார் அவர்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
இந்த சூழலில், எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எது எது என கணக்கெடுத்துள்ள கமல், கனிமொழி தத்தெடுத்துள்ள கிராமத்தில், மக்களுக்கான சுகாதாரம், கல்வி, குடிநீர், விவசாயம், சாலைகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் என்னென்ன விசயங்களை செய்திருக்கிறார் என்கிற விபரங்களையும், அதற்கான செலவினங்களையும் சேகரிக்கத் துவங்கியிருக்கிறார். அத்துடன், இத்தகைய பணிகள் குறித்து மக்களின் கருத்துக்ககளைத் திரட்டவும் திட்டமிட்டுள்ளாராம் கமல்.

கனிமொழி ஆதரவாளர்கள் தீவிரம்
தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு அனைத்து வசதிகளையும் ஒரு எம்.பி.செய்து தருகிறபோது அதனை கிராம மக்கள் நினைத்துப் பார்கிறார்களா? என்பதை அறிந்துகொள்ளவே மக்களின் கருத்தறிவதன் நோக்கம் என்கிறார்கள் கமலின் மய்யத்தினர். கமலின் இந்த ஆய்வை கனிமொழி ஆதரவாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனராம்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications