என்னிடம் வாருங்கள்.. மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நியாயம் புரியும்.. கமல்ஹாசன் பேச்சு
Recommended Video
திருச்சி: அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியவர்கள், மய்யத்திற்கு வாருங்கள் என்று கமல்ஹாசன் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
ராயப்பேட்டை மக்கள் நீதி மய்ய மகளிர் தின விழாவில் கமல்ஹாசன் பேசி வருகிறார். இதில் உஷாவின் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.
மேலும் அவர் ''பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய்.வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை; அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய்.தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால் இந்த மேடையில் நிற்கிறேன். '' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் ''உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு பெண்களைப் புரிந்து கொள்ளத் தெரியும். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். '' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் ''அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியவர்கள், மய்யத்திற்கு வாருங்கள்.மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும்.'' என்று குறிப்பிட்டார்.