தம் மண்ணில் உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி மக்கள்.. விரைகிறேன்: கமல்ஹாசன்
தூத்துக்குடிக்கு கமல்ஹாசன் விரைகிறார்.
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 12 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடிக்கு தாம் விரைந்து சென்று கொண்டிருக்கிறேன் என மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய குமாரெட்டியாபுரத்துக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். கடந்த வாரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காகவும் கமல்ஹாசன் தென்மாவட்ட பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் உலகத் தமிழர்களை உலுக்கும் வகையில் போலீசார் திட்டமிட்டு 12 பேரை சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த கமல்ஹாசன், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2018
இன்று தமது ட்விட்டர் பதிவில், தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.