நான் தனியாக நிற்க மாட்டேன்... நீங்கள்தான் நான்... கமல்
நான் தனியாக நிற்கமாட்டேன், நீங்கள்தான் நான் என்று கமல் பேசினார்.
Recommended Video
சென்னை : நான் தனியாக அரசியலுக்கு வரமாட்டேன். மாணவர்களாகிய நீங்கள்தான் நான் என்று நடிகர் கமல் பேசினார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மாணவர்கள் நடத்திய கலந்துரையாடலில் கமல் கூறுகையில் நாளை நமதே என்று நான் கூறுவது உங்களையும் சேர்த்துதான்.
நான் தனியாக நிற்கமாட்டேன். நீங்கள்தான் நான். வரும்முன் காப்பது உங்களால்தான் முடியும். 69-ஆவது குடியரசு தின விழாவில் சாதி, மத ரீதியாக நாம் பிரிந்து கிடப்பது சரியல்ல.
இதுவேண்டுமானால் சிலருக்கு சௌகரியமாக இருக்கலாம். சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து வரவேண்டும். கல்வி, சுகாதாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தண்ணீர் வரவில்லை எனில் அதில் உள்ள அரசியலை அறிய முற்படுங்கள்
நாளைய தலைவர் நீங்கள்தான். நான் தலைவர்களை பார்க்க வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நானும் தலைவன் என்று நினைக்க வேண்டும். அந்த அகங்காரம் இருக்க வேண்டும் என்றார் கமல்.