காவிரி பிரச்சினையை திசை திருப்பவே எச் ராஜாவின் கலக பேச்சு: கமல் குற்றச்சாட்டு
காவிரி பிரச்சினையை திசை திருப்பவே எச் ராஜா இதுபோல் பேசியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சினையை திசை திருப்பவே எச் ராஜா பெரியார் குறித்து கண்டனத்துக்குரிய கருத்துகளை பதிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜா கூறிய கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் கொடுக்கும் விளக்கத்தை பார்க்கும் போது எரியும் தீயில் நெய் ஊற்றியது போல் உள்ளது.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் அனைத்தும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

திரும்ப பெற முடியாது
அப்போது அவர் கூறுகையில் பெரியார் சிலையை யாரும் தொட்டுவிட முடியாது. கலக வார்த்தைகள் ஏன் பேசப்படுகிறது என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.ஹெச். ராஜாவின் வார்த்தை அம்பு போன்றது. திரும்ப பெற முடியாது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
எச் ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பெரியார் சிலைக்கு போலீஸ் காவல் எல்லாம் வேண்டாம் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்து கொள்வர்.

வருத்தம் தெரிவித்ததை என்னால் ஏற்க முடியாது
காவிரி பிரச்சனையை திசை திருப்ப எச். ராஜா முயற்சி செய்துள்ளார். தமது செயலுக்கு எச். ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது. எச் ராஜா வருத்தம் தெரிவித்ததை என்னால் ஏற்க முடியாது.

பிரச்சினை எழுந்தது
தமக்கு தெரியாமல் பதிவு என எச்.ராஜா கூறுவது நொண்டி சாக்கு சொல்கிறார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள சூழலில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.

தமிழகம் திசைத்திரும்ப கூடாது
இது மத்திய அரசின் தூண்டுதலா என்று கேட்கிறீர்கள். அப்படியும் இருக்கலாம். ஆனால் மத்திய அரசு அந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து தமிழகம் திசை திரும்பிவிடக் கூடாது.

ஊடகங்களும்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தமிழர்கள் திசை திரும்பாமல் இருக்க வேண்டும். ஊடகத்தினரும் திசை திரும்பாமல் இருக்க வேண்டும். ரஜினி எம்ஜிஆர் ஆட்சியை தந்தால் என்னால் மக்களாட்சியை தர முடியும் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications