அரசியலில் ‘ஏ’ வில் உள்ள கமல்ஹாசன் ‘பி’ க்கு வர பல காலமாகும்.. சொல்கிறார் "ஜெ"!
அரசியலில் ‘ஏ’ வில் உள்ள கமல்ஹாசன் ‘பி’ க்கு வர பல காலமாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அரசியலில் 'ஏ' வில் உள்ள கமல்ஹாசன் 'பி' க்கு வர பல காலமாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் தமிழகத்தில் பல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டங்களால் சென்னை மாநகர் ஸ்தம்பித்தது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆதிகாலத்திற்கு திரும்பிவிட்டதா?
அப்போது திமுகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். கல் எறியும் காலத்திலா திமுக உள்ளது? என்ற அவர், ஆதிமனிதர்கள் தான் கல்லை பயன்படுத்தினார்கள் திமுக ஆதி காலத்திற்கு திரும்பி விட்டதா? என்றார்.
அரசியல் ஆதாயம்
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில், ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்றும் அவர் கூறினார்.
அவசர ஊர்திக்கூட
பல முறை முயற்சி செய்தும் ஆட்சியை கலைக்க முடியாததால் தற்போது ஸ்டாலின் காவிரி பிரச்னையை கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். உண்ணாவிரதம் உள்ளிட்ட ஜனநாயக வழி போராட்டங்களுக்கு ஆதரவு உண்டு என்ற அவர், அவசர ஊர்திக்கூட செல்லமுடியாத அளவுக்கு திடீரென மறியல் செய்வது முறையல்ல என்றார்.
அரசியல் அப்பரன்டிஸ்
கமல் ஒரு அரசியல் அப்ரன்டிஸ் என்ற ஜெயக்குமார்,
அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல்ஹாசன், இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
நாங்கள் அரசியலில் ஹீரோ
கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ என்றும் நாங்கள் அரசியலில் ஹீரோ என்றும் அவர் கூறினார். மேலும் அரசியலில் ‘ஏ' வில் உள்ள கமல்ஹாசன் ‘பி' க்கு வர பல காலமாகும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.