அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதை பொருட்படுத்த தேவையில்லை: கடம்பூர் ராஜூ
அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சிவகாசி : கமல்ஹாசன் அரசியல் அறிவு இல்லாமல் பேசி வருகிறார். இதுபோன்று அவர் தொடர்ந்து பேசி வருவதை மக்கள் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

பாஜக மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா என்கிற கேள்விக்கு, அதுகுறித்து முதல்வர் மற்றும் துணைமுதல்வர், கட்சி நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள். அது எந்த முடிவாக இருந்தாலும் கட்சியினர் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.
பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் தெரிவித்து இருக்கும் கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அவர் பேசி வருவதை எல்லாம் மக்கள் பொருட்படுத்தவேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்தார்.
ஆறாவது முறையாக எந்தவித வரியும் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications