பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு
சென்னை: பரபரப்பான அரசில் சூழலில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னெடுத்து நடத்தினர். இதனால் கடந்த ஒரு வாரகாலமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆங்காங்கே அறவழி போராட்டங்கள் நடந்தது.

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர், வணிகர்கள் உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பல இடங்களில் ஒரு வாரகாலமாக நடந்து வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. மெரீனாவில் மட்டும் ஒரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தொடங்கிய நாள் முதல் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரல் எழுப்பி வந்தார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்தும் ஜல்லிக்கட்டு, மாணவர்கள் போராட்டம், போலீஸ் தடியடி, பீட்டா அமைப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்தநிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை இன்று மாலை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications