கனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகள் முடக்கம்
கனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
சென்னை: கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகைக் கடை. இந்த நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பெரிய பெரிய நகைக் கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக சிபிஐக்கு எஸ்பிஐ வங்கி புகார் கடிதம் அனுப்பியது.
முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்கி இந்த வங்கியில் இவர்கள் பெற்ற கடனை வருமானமாக கொண்டு 14 வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இதுபோல் 824 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
இந்த கடனுக்கான வட்டித் தொகையானது சுமார் ரூ.160 கோடி ஆகும். ஆனால் இவர்கள் பெற்ற கடனுக்காக வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பியபோதும் எவ்வித பதிலையும் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் புக்கத்துறையில் உள்ள கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.48 கோடி சொத்தை அமலாக்கத் துறை முடக்கியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications