கன்னியாகுமரியில் மாயமான பள்ளி மாணவி ஆசிரமக் கிணற்றில் பிணமாக மிதந்தார்
ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரியில் மாயமான பள்ளி மாணவி ஆசிரமக் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமத்தை அடுத்த மேட்டுக்குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் துரை. வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி சாந்தி. இவர்களின் மகள் சுபா.
கன்னியாகுமரி பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரம நிர்வாகிகளுடன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பெற்றோர் இவரை ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணியபுரத்தில் சுகுமாரன் என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் சேர்த்தனர். அங்கிருந்தபடி பெருமாள் புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். தினமும் காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் ஆசிரமம் திரும்பி விடுவது வழக்கமாம். இந்த நிலையில் அவர் மாலை வரை அறைக்கு திரும்பவில்லை.
இதையறிந்து ஆசிரம நிர்வாகி பதறியபடி ஆசிரம வளாகம் மற்றும் கிணற்றங்கரையிலும் சுபாவை தேடினார். இதுபற்றி உடனடியாக சுபாவின் தாயார் சாந்திக்கு தகவல் கொடுத்தார். அவர் மூலம் ஆரல்வாய்மொழி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரமத்திற்கு சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில் ஆசிரமத்தின் பின் பகுதி வழியாக கிராம மக்கள் சிலர் விவசாய வேலைக்கு சென்றனர். அவர்கள் ஆசிரம கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்றபோது, அங்கு ஒரு பெண் பிணம் கிடப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் துணையுடன் கிணற்றில் கிடந்த பிணத்தை மீட்டபோது அது மாணவி சுபாவின் உடல் என தெரிய வந்தது. ஆசிரமத்தில் மாயமான மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications