காஞ்சி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து-20 பேர் படுகாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வையாவூரில் உள்ள பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து இன்று பிற்பகலி்ல் நடந்துள்ளது.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதிய உணவு நேரம் என்பதால் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் பலர் தங்கள் வீடுகளுக்கு சாப்பிட்ட சென்றதால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதே ஆலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர்.ஆலையின் உரிமையாளர் "வெடிச் சந்திரன்" என்பவர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக தற்போது இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications