"காவிரியை வச்சுக்கோ.. "அம்மா"வைக் கொடுன்னு சொல்லிட்டு திருப்பிக் கேட்டா எப்படி?"
சென்னை: அதிமுகவினர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது "காவிரியை வச்சுக்கோ, அம்மாவைத் திருப்பிக் கொடு" என்று முட்டாள்தனமாக நடந்து கொண்ட கோமாளித்தனத்தை வைத்து தற்போது தமிழக மக்களை கிண்டலடித்து வருகின்றனர் கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக கன்னட அமைப்பினர் வாசகங்களைப் போட்டு வருகின்றனராம்.
அது மட்டுமல்லாமல் கர்நாடகத்தில் பல்வேறு அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திலும் இதைத்தான் ஹைலைட்டாக சொல்லி தமிழகத்தை கிண்டலடிக்கின்றனராம்.

கடந்த ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார் ஜெயலலிதா. பெங்களூர் அருகே பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதையடுத்து தமிழகத்தில் அதிமுகவினர் தாறுமாறான போராட்டங்களில் ஈடுபட்டனர். தரையில் படுத்து உருண்டனர், மார்பில் அடித்துக் கொண்டு அலறினர், கொடும்பாவிகளை கொளுத்தினர், தொடர் மறியல், உண்ணாவிரதம் என அதகளப்படுத்தினர்.
அதிலும் சிலர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கிறோம் என்ற போர்வயைில் லூசுத்தனமான செயல்களிலும் ஈடுபடத் தவறவில்லை. அதில் ஒன்றுதான் காவிரியை வச்சுக்கோ, எங்க அம்மாவைத் திருப்பிக் கொடு என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள். இதை அப்படியே நமக்கு எதிராக கிண்டலடிக்கும் ஆயுதமாக கன்னட அமைப்புகள் பயன்படுத்தி தமிழகத்தைக் கிண்டிலடிக்கிறார்களாம்.

அதான் காவிரியை வச்சுக்கோன்னு சொல்லிட்டீங்களே, பிறகு எதற்கு திரும்பக் கேட்கிறீர்கள் என்று கிண்டலாக கூறுகிறார்களாம்.
அதிமுகவினர்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications