மதுரையில் கந்துவட்டி கொடுமை: வீடு புகுந்து பெண்ணை தாக்கிய கொடூரம்: வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்த
மதுரை: கந்துவட்டி கேட்டு பெண்ணை வீடு புகுந்து மிரட்டி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை புதூர் கணேஷ் நகரை சேர்ந்த எஸ். ராஜ்குமார் என்பவரின் மனைவி ஜெயலெட்சுமி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
நான் மதுரை கே.கே.நகரில் தனிஸ் கிப்ட்ஸ் மெஜெஸ்டிக் சினி ஹால் என்ற முகவரியில் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன் என்னுடைய தொழில் அபிவிருத்திக்காக நடேச பாண்டியன், ரெய்னாபேகம், சந்திரன், சாந்தி, செந்தில், அன்பு உள்ளிட்ட 20 பேரிடம் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு முறையாக வட்டியும் செலுத்தி வந்தேன்.
கடந்த மே மாதம் துவக்கத்தில் நான் வாங்கிய கடன்தாரர்கள் அனைவரிடத்திலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் நான் கொடுத்த காசோலை சிலிப்புகளை கேட்டும் தரவில்லை.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாலை மேற்கண்ட 20 பேர்களும், அடியாட்கள் 30 பேரும் சேர்ந்து என் வீட்டிற்குள் நுழைந்து என்னை அடித்து உதைத்து வாங்கிய கடனுக்கு வட்டியும் சேர்த்து தர வேண்டும், இல்லையென்றால் கொன்று புதைத்து விடுவோம் என்று என்னை மிரட்டினார்கள்.
நான் வலி தாங்க முடியாமல் சப்தம் போட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள். அவர்களை கண்டவுடன் மேற்கண்ட நபர்கள் இடத்தை விட்டு ஓடி விட்டார்கள்.
இது குறித்து நான் கடந்த 7ம் தேதி கோ. புதூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரில் சென்று புகார் கொடுத்தேன். ஆனால் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேற்கண்ட எதிரிகளால் எனது உயிருக்கும், உடமைக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து நேரக்கூடும் என அஞ்சுகிறேன். எனவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த புகார் மனு மீது முகாந்தரம் இருக்கும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications