சென்னையில் அக்கிரமம் செய்த 'கந்துவட்டி மன்னன்' காமராஜ் கைது
சென்னை: சென்னையில் கந்துவட்டி மன்னன் காமராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை காரப்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவர் எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவுபடுத்த அவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னை புரசைவாகத்தைச் சேர்ந்த காமராஜ்(39) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
காமராஜ் சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை வைத்துள்ளார். சண்முகம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பிறகும் வட்டிக்கு வட்டி கட்டுமாறு காமராஜ் வற்புறுத்தி வந்ததோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து சண்முகத்தின் மகன் டில்லிராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது தந்தை சண்முகம் தான் வாங்கிய ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகும், எனது தந்தை கடனுக்காக கொடுத்த சொத்து ஆவணங்களை காமராஜ் திருப்பி தர மறுக்கிறார். ஏற்கனவே பெற்ற ரூ.30.25 லட்சம் போக, மேலும் ரூ.27 லட்சம் கேட்டு, மிரட்டுகிறார். அவர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தந்தை கொடுத்த சொத்து ஆவணங்களை திருப்பி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை திங்கட்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். காமராஜ் சண்முகத்தை போன்று பலரை மிரட்டி கந்துவட்டி வாங்கியது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் காமராஜ். அவரது குடும்பத்தார் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வசிக்கிறார்கள். காமராஜால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக வந்து புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications