தேரோடும் எங்க சீரான மயிலையிலே….
வீதிகளில் தேரோடினாலே உற்சாகம்தான்... ஊரெல்லாம் கூடி நின்று தேரிழுக்க... ஆடி அசைந்து... அழகுற மாட வீதிகளில் வலம் வரும் தேரினைக் காண கண்கோடி வேண்டும்.
இன்று நடைபெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தினை சென்னை மட்டுமல்லாது புறநகர் பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பர், திருநாவுக்கரசர், சம்பந்தர் உள்ளிட்ட சிவனடியார்கள் பாடல் பெற்ற இந்த திருத்தலத்தின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10 நாட்கள் திருவிழா
10 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் அதிகார நந்தி, வெள்ளிவிடை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தார்.

தேரோட்டம்
பங்குனிப் பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வந்தார்.

பக்தர்கள் தரிசனம்
வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலர், சண்டிகேஸ்வரர் தேர்கள் கபாலீஸ்வரரை பின் தொடர்ந்தன. மயிலை மாட வீதியில் ஆடி அசைந்து அழகுற வலம் வந்த திருத்தேரினை காண சாலையோரங்கள் மற்றும் உயர்ந்த கட்டிடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

கவனமா பாருங்க...
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது அவர்கள் பெண் பக்தர்களின் கழுத்த கவர் பண்ணுங்க, செயினை கவர்பண்ணுங்க என்று அறிவுறுத்தினர்.

பனையோலை விசிறி
வெயிலின் தாக்கத்தை தணிக்க தேர் இழுத்த பக்தர்களுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்தும், பனையோலை விசிறி வீசியும் ஏராளமானோர் பணிவிடை செய்தனர்.

கிராமத்து பாணியில்
சென்னையின் மையப்பகுதியில் இருந்தாலும் மயிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா கிராமத்து பாணியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

63 மூவர் திருவிழா
பங்குனித் திருவிழாவின் முக்கிய அம்சமான அறுபத்து மூவர் திருவிழா நாளை நடைபெறுகிறது. 63 நாயன்மார்களும் வீதி உலா வரும் போது அவர்களுக்கு வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி கபாலீஸ்வரர் காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications