For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரகாட்டக்கார மோகனாம்பாளிடம் 3 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை

Google Oneindia Tamil News

Karagam dancer Mohanambal grilled for 3 hours…
வேலூர்: செம்மரக்கடத்தல் மற்றும் நகை, பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைதான கரக்காட்டக்காரக் கலைஞர் மோகனாம்பாளிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாளின் வீட்டில் இருந்து பல லட்சம் பணம் மற்றும் 73 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 9ஆம் தேதி அன்று மோகனாம்பாள் மற்றும் அவரது அக்கா நிர்மலா ஆகியோர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

விசாரணைக்குப்பின் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகனாம்பாள், நிர்மலா ஆகியோரிடம் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் திடீரென நேற்று விசாரணை நடத்தினர்.

5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகனாம்பாள், நிர்மலா ஆகியோரை தனித்தனியே விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை மோகனாம்பாள் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

English summary
Vellore enforcement Division officers investigated to Karagam dancer Mohanambal who arrested in Red tree case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X