சேலம் சிறையிலிருந்த குட்டி வீரப்பன் மீண்டும் கைது- கர்நாடக வனத்துறையினர் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சரவணன் என்ற குட்டிவீரப்பன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள வனப்பகுதியில் வைத்து வழக்கு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டார். பின்னர் மேட்டூர் சப்-கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட குட்டி வீரப்பன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடகா வனப்பகுதியில் வேட்டையாடியது தொடர்பாக அம்மாநில போலீசார் சேலம் கோர்ட்டில் அடைக்கப்பட்டிருந்த குட்டி வீரப்பனை கைது செய்து கொள்ளேகால் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டி வீரப்பனை, மேலும் ஒரு வழக்கில் கைது செய்த கர்நாடக வனத்துறையினர் பெங்களூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அங்கு அவரை அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications