வரும் 12-ம் தேதி திருகார்த்திகை தீபம்.. அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு
கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
சென்னை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூர் பகுதிகளில் விற்பனைக்காக விளக்குகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்துக்களின் மிகமுக்கிய பண்டிகையான தீபத்திருவிழாவை ஒட்டி 3 நாட்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி அலங்கரிப்பார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவார்கள்.

களிமண்ணால் செய்யப்பட்டு, வரிசையாக ஏற்றப்படும் விளக்குகள் பார்ப்பதற்கு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடியதாக விளங்குகின்றன. சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் தீப விளக்குகள் விற்பனை செய்கின்றனர்.

குத்துவிளக்கு, தாமரை விளக்கு, ஒருமுக விளக்கு, பூ வடிவிலான விளக்கு, காமாட்சி விளக்கு போன்ற பல்வேறு வகையிலான விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான மண் விளக்குகள் ஒரு ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 200 ரூபாய் வரையிலும் விலை உள்ளது. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications