ஆம் ஆத்மியிடம் தமிழக காங். பாடம் கற்கனும்..: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சீண்டும் "கா.சி"!
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை முன்வைத்து ஆம் ஆத்மியிடம் தமிழக காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட நாள் முதலே கார்த்தி சிதம்பரம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். காமராஜரை விமர்சிக்கப் போய் பெரும் பஞ்சாயத்து ஏற்பட்டது.

அதன் பின்னர் ஜி67 என்ற குழுவை உருவாக்கி அது அடுத்த பஞ்சாயத்து ஆனது. காங்கிரஸ் கட்சியை விட்டு ஜெயந்தி நடராஜன் விலகிய போது, மகனும் அப்பாவும் கட்சியை விட்டு போனால் விமோசமனம் கிடைக்கும் என்று இளங்கோவன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக டெல்லி வரையில் 'கட்டாய பஞ்சாயத்து' நடந்தது. பின்னர் இளங்கோவன், நான் சிதம்பரத்தை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றார். அதனைத் தொடர்ந்து சிதம்பரத்துடன் சிறிய வேறுபாடு இருந்தது.. அதெல்லாம் சரியாகிவிட்டது என்று சில நாட்களுக்கு முன்னர்தான் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
தற்போது கார்த்தி சிதம்பரம் மீண்டும் இளங்கோவனுடன் மல்லுக் கட்டும் வகையில் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
Lessons from #AAPSweep, no one is invincible, state politics needs a credible leader n an agenda. People want leadership at their doorstep.
— Karti P Chidambaram (@KartiPC) February 10, 2015 டெல்லி தேர்தல் முடிவு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மக்கள் தங்களுக்கான தலைவரை தங்களது அருகில் இருந்தே தேர்வு செய்கின்றனர்.
இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டியது அவசியம். நமது கட்சியின் மாநில தலைமைக்கு நம்பகமான தலைவரும் கொள்கை ரீதியில் மாறுதலும் தேவை என்று பதிவு செய்துள்ளார்.
இது என்ன பஞ்சாயத்தை உருவாக்குமோ?












Click it and Unblock the Notifications