ஆர்.கே.நகரில் போட்டியிட கங்கை அமரன் மறுப்பு- கரு. நாகராஜன் வேட்பாளர்- தமிழிசை சவுந்தரராஜன்
ஆர்கே நகரில் போட்டியிட கங்கை அமரன் மறுத்ததல் கரு. நாகராஜனை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக கரு. நாகராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன், சசிகலா அக்காள் மகன் தினகரன், நடிகர் விஷால், தீபா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் பாஜக சார்பில் யாரை நிறுத்துவது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. கடந்த முறை போட்டியிட்ட இசை அமைப்பாளர் கங்கை அமரன் இம்முறை போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறியது.

இந்நிலையில் கரு. நாகராஜன், ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலராக இருந்தவர் கரு. நாகராஜன். அங்கிருந்து பாஜகவுக்கு தாவி தற்போது ஆர்.கே.நகர் வேட்பாளராகி இருக்கிறார் கரு.நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications