பெரியார் - அண்ணாவிற்கும் பாரத ரத்னா விருது: கருணாநிதி கோரிக்கை
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள கருணாநிதி, பெரியார், அண்ணாதுரை ஆகியோருக்கும் பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து பிரதமர், குடியரசுத்தலைவருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திராவிட முன்னேற்றக் கழகத்திடமும், குறிப்பாக என்னிடமும் நெருங்கிய அன்பு கொண்டவருமான, இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு "பாரத ரத்னா" விருது வழங்க மத்திய அரசு முன் வந்திருப்பதற்காக நன்றி கூறுவதோடு, விருது பெற்ற தலைவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று 24-8-2014 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நான் கடிதம் எழுதியிருந்தேன்.
எனவே பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை பிரதமர் அவர்களையும், குடியரசு தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications