ஏற்காடு இடைத் தேர்தல்... கனிமொழி 2 நாள், கருணாநிதி ஒரு நாள் பிரசாரம்

ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டது. இதையடுத்து பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் மாறனை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் சரோஜாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் படை, மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் என பெரும் படையே களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வாக்குப் பதிவுக்கு முன்பாக நான்கு நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்து பொதுக்கூட்டத்தில் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
அதேபோல கனிமொழி வருகிற 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்கள் தீவிரப் பிரசாரம் செய்கிறார்.
நடிகை குஷ்பு போன்றவர்கள் பிரசாரத்திற்குப் போவார்களா என்பது தெரியவில்லை.
டிசம்பர் 4ம் தேதி ஏற்காடு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.












Click it and Unblock the Notifications