கர்நாடகாவை கண்டித்து தீக்குளித்த விக்னேஷூக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தீக்குளித்த மன்னார்குடி விக்னேஷ் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நடத்தப்பட்ட பேரணி ஒன்றில் கலந்து கொண்ட மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து மாண்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
கர்நாடக அரசைக் கண்டித்து நடந்த பேரணியில் தீக்குளித்து மாண்டு போன விக்னேஷ்க்கு இரங்கல்
— KalaignarKarunanidhi (@kalaignar89) September 17, 2016
Read: https://t.co/s9UkUwHCZA
எவ்வளவு தீவிரமான பிரச்சினை ஆனாலும், அதற்காக உயிரோடு இருந்து வாழ்நாள் முழுதும் போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்வதென்பது சோகமயமானதும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்.
இன்றைய இளைஞர்கள் இதனை உணர்ந்து தங்களுடைய இத்தகைய போராட்ட வழிமுறைகளை வகுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தீக்குளித்து மாண்ட விக்னேஷ் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.