முதல் முதலாக தேசியக் கொடியேற்றிய முதல்வர்... தற்போது தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளார்!
சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றும் அதிகாரத்தை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி. முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வரும் அவர்தான்.
Recommended Video

சென்னை: சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்ற வேண்டும் என்று போராடி வென்று, முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் என்ற பெருமை பெற்றவர் கருணாநிதி. தற்போது தேசியக் கொடி போர்த்தப்பட்டு அவருடைய இறுதிச் சடங்கு நடக்கிறது.
தமிழக முதல்வராக ஐந்து முறை இருந்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில், ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வந்தனர்.

இதை மாற்றி குடியரசு தினத்தில் ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி போராடினார்.
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதன்படி, அனுமதி கிடைத்து, சுதந்திர தினத்தில் கொடியேற்றிய நாட்டிலேயே முதல் முதல்வர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றார். 1974 ஆகஸ்ட் 15ம் தேதி அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவருக்கு தற்போது முழு அரசு மரியாதையுடன் உடலடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவருடைய உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது.
முதல்வர்களுக்கு உரிமை பெற்றுத் தந்த கருணாநிதிக்கு இந்த கவுரவம் மிகவும் பொருத்தமானதே.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications