நிலமே உரிமை.. போராளிக்காக போராடி பெற்ற இடம்.. மகிழ்ச்சியில் மக்கள்!
திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை, தமிழக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை, தமிழக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். தற்போது அவரது இறுதி சடங்கு பணிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க தலைவர்கள் அவருக்காக கண்ணீர் விட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அண்ணா சமாதிக்கு பின் கருணாநிதியை அடக்கம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது அவரை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அவர் போராளிடா
இவர் ''அவன் போராளிடா... எல்லாத்தையும் போராடிதான் வாங்கிருக்கான்... போராடிதான் ஜெயிச்சிருக்கான்.'' என்று பாசமாக கூறியுள்ளார்.
அவருக்கு இடம் கிடைத்தது
இவர் '' மெரினாவில் கலைஞருக்கு இடம் கிடைத்தது💪இருக்கும்போதும் இருந்தபோதும் உன் போராட்டம் ஒருபோதும் தோற்றதில்லை.இனி தமிழகம் மெரினாவில் திராவிடம் கற்க்கும்'' என்றுள்ளார் .
ஒரு அறை
இவர் ''விட்டார் பார் ஓர் அறை!அவர் இறப்பை கொண்டாடியவன்களின் முகங்கள் அத்தனையும் இப்போது வாடிப் போயிருக்கும். பாவம்!'' என்று கூறியுள்ளார்.
அந்த வசனம்
இவர் ''இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது!- அவர் வசனம் அவருக்கே அர்ப்பணம் !'' என்றுள்ளார்.
வைத்துக்கொள்ளுங்கள்
இவர் ''அங்கே எழுதி வையுங்கள். இட ஒதுக்கீட்டிற்காக இவன் இறந்தும் போராடினான் என்று. சமூகநீதிக்காக இவன் சடலமும் சண்டை போட்டதென்று'' என்றுள்ளார்.
வாருங்கள் மக்களே
இவர் ''கண்ணீர் விட ஆத்திரப்பட இனி எதுவுமில்லை. கொண்டாடுவோம். பாட்டிசைப்போம். நடனமாடியபடியே மெரினாவை நோக்கி நடப்போம். அவனைக் களிப்புடன் அங்கே நட்டு வைப்போம்!'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications