பழ.கருப்பையா மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் - கருணாநிதி
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகிய ரோமாபுரி பாண்டியன் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கருணாநிதி பேசுகையில், ரோமாபுரி பாண்டியன் தொடரில் பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசியல் கட்சியாக மட்டுமல்லாமல் இலக்கியத்திற்காகவும், லட்சியத்திற்காகவும் செயல்படும் கட்சியாக திகழ்கிறது. திராவிட கொள்ளைகளை பற்றி பேசுபவர்கள் அனைவரையும் நம்ப வேண்டாம். இடையில் ஏற்பட்ட கசப்புகளை மறந்து அனைவரும் கட்சிப் பணி ஆற்ற வேண்டும்.
முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நம்மோடு இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும். அவரை போன்ற தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து திமுகவில் இருக்க வேண்டும் என்றார். கருணாநிதியின் கோரிக்கைக்கு பதிலளித்த, பழ.கருப்பையா திமுகவில் இணைய வேண்டும் என கருணாநிதி அழைப்பு விடுத்ததே மிகப்பெரிய பாக்கியம் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications