விஜயகாந்த் தனித்துப் போட்டி அறிவிப்புக்கு இப்படி கெத்து படம் போட்டு பதில் சொல்கிறாரோ கருணாநிதி?
சென்னை: சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டதற்கு பதில் தருவதைப் போல தம்முடைய ஃபேஸ்புக்கில் ஒரு படத்தை திமுக தலைவர் கருணாநிதி பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் அதிக ஷேராகிக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என வெளிப்படையாக கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தேமுதிகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் விழும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தனக்கே உரிய பாணியில் பதில் சொல்லியிருந்தார்.

ஆனால் திடீரென விஜயகாந்த், தனித்து போட்டி என அறிவித்திருக்கிறார். இது திமுகவுக்கு ஏமாற்றம்; அதிர்ச்சி; பின்னடைவு என பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதி தம்முடைய 'கெத்து' புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். கைகளை உயர்த்தி எதையும் எதிர்கொள்வோம் என சூளுரைப்பது போன்ற அந்த படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications