ரேசன் கடை, அரசு அங்காடிகளில் மட்டும் பருப்பு விலையை குறைத்தால் போதுமா? கருணாநிதி கேள்வி
சென்னை: ரேசன் கடைகளிலும், அரசு அங்காடிகளிலும் துவரம் பருப்பை கொடுத்தால் போதுமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் போதுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது துவரம் பருப்பின் விலை நான்கு மடங்காக அதிகரித்து 210 ரூபாயாக உள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் கருணாநிதி இன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே அறிவார்கள். ஏன், இந்த இதழ், ஜூனியர் விகடனில் கூட இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. துவரம் பருப்பு விலை உயர்ந்து விட்டதா, ஏதாவது ஒரு நாட்டில் இருந்து அந்த நேரத்துக்கு இறக்குமதி செய்தால் தனது கடமை முடிந்து விட்டதாக மத்திய அரசு நினைக்கிறது.
அரசு அங்காடிகளில் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொடுத்தால் போதும் என்று மாநில அரசு நினைக்கிறது. தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன்
கடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் என்ன ஆகும்? தங்கள் கடமைக்கு சில நூறு டன்களைக் கொண்டு வந்து, அதை மட்டும் கிலோ 110
ரூபாய்க்குக் கொடுப்பார்கள்.
இதோ பார், துவரம் பருப்பு விலை குறைந்து விட்டது"என்று விளம்பரம் கொடுத்துக் கொள்ள மட்டுமே அது பயன்படும். பண்டிகைக் காலங்களில் விலைவாசி உயரும்
என்றால் பல மாதங்களுக்கு முன்பே அதனை வாங்கி விநியோகிக்கும் முன் யோசனை ஏன் வருவதில்லை? ஆட்சியாளர்கள் இதெல்லாம் தங்கள் வேலையாக நினைப்பதில்லை"என்று அ.தி.மு.க.
அரசுக்கும் அந்தத் துறையின் அமைச்சருக்கும் ஜூனியர் விகடன் விளக்கம் கொடுத்துள்ளது. துறையின் அமைச்சர் முதலில் அந்த இதழ் கேட்டுள்ள விவரத்திற்கு பதில் கூற முன் வரட்டும் என்று கருணாநிதி வறியுள்ளார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications