Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேசன் கடை, அரசு அங்காடிகளில் மட்டும் பருப்பு விலையை குறைத்தால் போதுமா? கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேசன் கடைகளிலும், அரசு அங்காடிகளிலும் துவரம் பருப்பை கொடுத்தால் போதுமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் போதுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது துவரம் பருப்பின் விலை நான்கு மடங்காக அதிகரித்து 210 ரூபாயாக உள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மறுப்பு தெரிவித்தார்.

Karunanidhi slams Tamil Nadu on dal price rise

இந்த நிலையில் கருணாநிதி இன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே அறிவார்கள். ஏன், இந்த இதழ், ஜூனியர் விகடனில் கூட இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் வேலை என்றுகூட இவர்கள் நினைப்பதில்லை எதனால் விலைவாசி கூடுகிறது என்பதையும் கவனிப்பது இல்லை. துவரம் பருப்பு விலை உயர்ந்து விட்டதா, ஏதாவது ஒரு நாட்டில் இருந்து அந்த நேரத்துக்கு இறக்குமதி செய்தால் தனது கடமை முடிந்து விட்டதாக மத்திய அரசு நினைக்கிறது.

அரசு அங்காடிகளில் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொடுத்தால் போதும் என்று மாநில அரசு நினைக்கிறது. தமிழகம் முழுவதும் 91 அரசு அங்காடிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன்

கடைகளும் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்தக் கடைகளுக்குப் படையெடுத்தால் என்ன ஆகும்? தங்கள் கடமைக்கு சில நூறு டன்களைக் கொண்டு வந்து, அதை மட்டும் கிலோ 110

ரூபாய்க்குக் கொடுப்பார்கள்.

இதோ பார், துவரம் பருப்பு விலை குறைந்து விட்டது"என்று விளம்பரம் கொடுத்துக் கொள்ள மட்டுமே அது பயன்படும். பண்டிகைக் காலங்களில் விலைவாசி உயரும்

என்றால் பல மாதங்களுக்கு முன்பே அதனை வாங்கி விநியோகிக்கும் முன் யோசனை ஏன் வருவதில்லை? ஆட்சியாளர்கள் இதெல்லாம் தங்கள் வேலையாக நினைப்பதில்லை"என்று அ.தி.மு.க.

அரசுக்கும் அந்தத் துறையின் அமைச்சருக்கும் ஜூனியர் விகடன் விளக்கம் கொடுத்துள்ளது. துறையின் அமைச்சர் முதலில் அந்த இதழ் கேட்டுள்ள விவரத்திற்கு பதில் கூற முன் வரட்டும் என்று கருணாநிதி வறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+