பீகார் தேர்தலில் அமோக வெற்றி... நிதிஷ்குமாருக்கு கருணாநிதி, ஜி.கே.வாசன் வாழ்த்து
சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் நிதிஷ்குமாருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சிறந்த நிர்வாகம், வளர்ச்சி மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைய வைத்ததாலும் சமூக நீதியில் அர்ப்பணிப்புடன் இருந்ததாலும் நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த அமோக வெற்றி பெற்ற மகா கூட்டணிக்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
Congrats @NitishKumar ji on your landslide victory, as expected. People of Bihar have voted for good governance! pic.twitter.com/0P4raKbM12
— KalaignarKarunanidhi (@kalaignar89) November 8, 2015 இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், மதச்சார்பின்மைக்கு கிடைத்த மகத்தான வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications