அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி- 3 மாதங்களுக்கு பின் வருகை!
கருணாநிதி 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதுமையால் உடல்நலன் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். அவர் உடநலம் தேறி வரும் நிலையில் தலைவர்கள் சந்தித்து செல்கின்றனர்.

அண்மையில் முரசொலி அலுவலககம் சென்றார். அதன்பின்னர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வருகை தந்திருந்தார்.
கருணாநிதி உடல்நலன் தேறி வரும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி மீண்டும் வருகை தந்தார்.

கருணாநிதியை ஸ்டாலின், துரைமுருகன், வரவேற்றனர். பின்னர் தம்முடைய அறைக்கு சென்றார் கருணாநிதி. சுமார் 25 நிமிடங்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்தார்.
அப்போது இந்தியா-வங்கதேசம் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகளை டிவியில் பார்த்து ரசித்தார். பின்னர் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications