இந்தியாவின் அத்தனை பிரதமர்களுடனும் அரசியல் செய்த ஒரே தலைவர்.. கருணாநிதி!
கருணாநிதி என்ற தலைவர் மட்டுமே 14 பிரதமர்களுடன் அரசியல் செய்தவர் ஆவார்.
சென்னை: கருணாநிதி என்ற தலைவர் மட்டுமே 14 பிரதமர்களுடன் அரசியல் செய்துள்ளார்.
திருக்குவளையில் பிறந்த கருணாநிதி 13 முறை எம்எல்ஏ-வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்தார். எழுத்து, இலக்கியம், வசனம், திரைக்கதை, அரசியல் என பன்முக தன்மைகளை கொண்டவர் கருணாநிதி.

இவர் தமிழகத்துக்கு செய்த சாதனை ஏராளம். இந்நிலையில் இவர் காலமான நிலையில் இவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செய்து வருகின்றனர்.
14 பிரதமர்களுடன் அரசியல் செய்த ஒரே தலைவர் கருணாநிதி என்ற பெருமையை ஏற்படுத்தியுள்ளார். அந்த 14 பேர் யார் என்பதை பார்ப்போம்.
ஜவஹர்லால் நேரு
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
ராஜீவ் காந்தி
வி.பி. சிங்
சந்திரசேகர்
நரசிம்ம ராவ்
தேவகௌடா
ஐ.கே. குஜரால்
அடல் பிகாரி வாஜ்பாய்
மன்மோகன் சிங்
நரேந்திர மோடி
ஆகிய 14 பிரதமர்களுடன் அரசியல் செய்தவர் கருணாநிதி, அதாவது இந்தியாவின் முதல் பிரதமர் முதல் தற்போதைய பிரதமராக உள்ள மோடி வரை கருணாநிதி அரசியல் செய்துள்ளார் என்பது மாபெரும் வரலாற்று சாதனை. யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications