அதிமுக என்ன சசிகலா குடும்ப சொத்தா? கருப்பசாமி பாண்டியன் ஆவேசம்
அதிமுக சசிகலாவின் குடும்ப சொத்தா? என்று கேள்வி எழுப்பினார் கருப்பசாமி பாண்டியன். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையிடமிருந்து அழைப்புவந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்தார்.
சென்னை: சசிகலா தனது உறவுக்காரரான டி.டி.வி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமித்ததை சாடியுள்ளார் அக்கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன்.
அதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கருப்பசாமி பாண்டியன் இன்று அறிவித்தார்.

இதன் பிறகு நிருபர்களிடம் பேசுகையில், என் ஆதரவாளர்களுடன் கலந்து பேசிவிட்டு அடுத்த முடிவை அறிவிப்பேன். ஆளுநர் சசிகலாவை பதவி ஏற்க அழைப்பதற்கு தாமதப்படுத்தியது நல்லது தான். இல்லையென்றால் ஆறு நாள் முதல்வராக இருந்துவிட்டு, குற்றவாளியாக சிறை சென்றிருப்பார் என்றார் கருப்பசாமி பாண்டியன்.
அதேநேரம், புயல் பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்த கருப்பசாமி பாண்டியன், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையிடமிருந்து அழைப்புவந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்தார்.
அதிமுக சசிகலாவின் குடும்ப சொத்தா? என்றும் கேள்வி எழுப்பினார் கருப்பசாமி பாண்டியன்.












Click it and Unblock the Notifications