பாட்டி கையைப் பிடித்தும், பூக்காரம்மாவிடம் நோட்டீஸ் கொடுத்தும் வாக்கு சேகரித்த என்.எஸ்.கே.!
கரூர்: முதியவர்களின் கையை பிடித்து கொண்டும், டீக்கடைக்காரப் பெண் மற்றும் பூ கட்டு வியாபாரிகளிடம் வாக்குகள் சேகரித்தார் கரூர் தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன்.
கரூர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் மணப்பாறை தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
மணப்பாறை வளநாடு, தொட்டியப்பட்டி, கோயில்பட்டி உள்ளிட்ட சுமார் 80 க்கும் மேற்பட்ட ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அம்மா எனக்கு ஓட்டுப் போடுங்க
அப்போது வயதானவர்களை பார்த்தவுடன் பிரச்சார வாகனத்தை விட்டு இறங்கிய தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் அம்மா எனக்கு ஒட்டு போடுங்க கண்டிப்பாக உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என்றார்.
பூக்காரம்மா முரசுக்கே உங்க ஓட்டு
பின்னர் அங்கு பூ கட்டும் பெண்ணிடம் கண்டிப்பாக எனக்கு ஒட்டு போடுங்க அம்மா உங்கள் ஊர் பிரச்சினையை கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்.
என்னை எம்.பியாக்குங்கள்
அங்குள்ள டீக் கடைகாரரிடம் உங்கள் ஒட்டை முரசு சின்னத்தில் அளித்து என்னை எம்.பி யாக தேர்ந்தெடுங்கள்.
உங்க வீட்டுப் பிள்ளையாக
உங்கள் வீட்டு பிள்ளையாக கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வருவேன் என்றார் என்.எஸ். கிருஷ்ணன்.