"அம்மா"வின் பிறந்த நாளை சீரும், சிறப்புமாக கொண்டாடிய செய்தி மக்கள் தொடர்பு துறை!
கரூர்: என்னதான் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை தந்தாலும், குற்றவாளி என்ற முத்திரையுடன் அவர் வலம் வந்தாலும், பதவியிழந்தவர் என்றாலும் கூட தமிழக அரசுக்கு அவர்தான் இன்னும் முதல்வராக இருக்கிறார் போலும். தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளும் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடியுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 67 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க வினர் கொண்டாடினர். அதேபோல செய்தி மக்கள் தொடர்பு துறையையும் கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என தலைமை செயலகத்திலிருந்து மறைமுக உத்தரவு போயிருந்ததாம்.

இதையொட்டி தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்பு துறையினர் புகைப்பட கண்காட்சியை வைத்து அதிமுக பொதுச் செயலாளரின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

கரூர் பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது. இதனை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அருணா உள்ளிட்ட பல அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்பட கண்காட்சியில் ஜெயலலிதா அண்ணாவுடன், கல்விக் கண் திறந்த காமராஜர், தந்தை பெரியார் ஆகியோருடன் இருந்தது மட்டுமில்லாமல் "அம்மா" பொதுமக்களுக்கு கொடுத்த நலத் திட்டங்கள் என "அம்மா" புராணமாகவே இருந்தது. லட்டு ஜாங்கிரி, பூந்தி மட்டும்தான் தரவில்லை. மற்றபடி பிறந்த நாளை செய்தி மக்கள் தொடர்புத்துறை சிறப்பாகவே கொண்டாடியது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications