கரூர்: சொத்துப்பிரச்சினையில் தாயை கொல்ல முயன்ற மகனுக்கு 7 ஆண்டு சிறை
கரூர்: சொத்துக்களை எழுதிவைக்க மறுத்த தாயை கொலை செய்ய முயன்ற மகனுக்கு கரூர் மகிளா நீதிமன்றம் 7ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கஸ்தூரி குரும்பம்பட்டியை சேர்ந்தவர் குமாரசாமி கவுண்டர். இவரது மனைவி மாரியாயி. இவர்களுக்கு செல்வராஜ் ( வயது 43) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குமரசாமியும், அவரது மனைவியும் தங்களின் சொத்துக்களை மகளின் பெயருக்கு எழுதிவைக்க முயற்சி செய்தனர்.
இதையறிந்த செல்வராஜ், தனது தாயார்தான் இதற்கு காரணம் என்று நினைத்து அவரை கொல்ல நினைத்தார். தனது இரு சக்கர வாகனத்தில் தாய் மாரியாயியை அழைத்துக்கொண்டு கடவூர் சென்றார். செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் தாயை அடித்து கொல்ல முயன்றார்.
மகனிடம் இருந்து தப்பிய மாரியாயி, அவரிடம் இருந்து தப்பித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கூறினார். இந்த வழக்கு கரூர், மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தாயை கொலை செய்ய முயன்ற மகன் செல்வராஜூக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்தும் கரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications