அணிவகுத்த குட்டி விவேகானந்தர்கள்.. கரூர் பள்ளியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
கரூர்: கரூர், பரணிபார்க் கல்விக் குழுமத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பரணிபார்க் கல்விக் குழுமங்களின் சார்பில் கல்விக் குழும வளாகத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் சா.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணிபார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், "விவேகானந்தாதான் ஆன்மீக சாதனைகள் குறித்தும், விவேகானந்தாதான் தேசபக்தி, தெய்வபக்தி கருத்துக்கள் பாரத தேசத்தின் உயர்வுக்கு அடித்தளம் அமைத்தது குறித்தும் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

மேலும் இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வழிகாட்டிய மாமேதையான விவேகானந்தாதான் வழிநின்று மாணவர்களாகிய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்" என்று கூறினார்.
விவேகானந்தர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விவேகானந்தர் போன்று மாறுவேடமணிந்து வந்திருந்தனர். மாணவ, மாணவிகளிடையே கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பரணிபார்க் பள்ளியின் முதல்வர் க.சேகர் வரவேற்புரையாற்றினார். பரணிவித்யாலயா பள்ளியின் முதல்வர் சு.சுதாதேவி நன்றியுரையாற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரணிபார்க் கல்விக் குழுமங்களின் நிர்வாக அலுவலர் மு.சுரேஷ் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications